Posts

மள்ளர் மருதநில மரபு - 3

Image
Part 2 continue.. குடும்பத் தலைவன் 'குடும்பன்'. அதன் படிநிலை வளர்ச்சியாக பல குடும்பங்கள் அடங்கிய 'குடும்பு' என்ற அமைப்பிற்குத் தலைவனானவன் ஊர்க் கிழவன் என்ற ஊர்க்குடும்பன். இந்த ஊர்க் கிழவன்தான் அரசகுலத் தொடக்கம் என்று ஏற்கனவே பாவாணரின் விளக்கம் காட்டியுள்ளேன். இதை எப்படி நம்புவது! இதையும் பாவாணர் தெளிவாக விளக்கியுள்ளார். ஆதாரம் கீழே இணைத்துள்ளேன். பார்த்துக் கொள்ளவும். ஏன் குடும்பம் என்பதும், ஊர் என்பதும் பள்ளர்கள் சம்பந்தப்பட்டது மட்டுந்தானா? மற்றவர்களுக்கு இல்லையா? திணைமயக்கம் ஏற்படுவதற்கு முன்பு வரை குடும்பம் என்ற அமைப்பும், அதனை சேர்ந்த ஊர்ப் பிரிவும் மருதநில மக்களிடத்தில் மட்டுந்தான் இருந்தது. இதற்கான பாவாணர் கொடுத்த தெளிவான ஆதாரத்தையும் கீழே இணைத்துள்ளேன். இந்த மள்ளர் என்ற சொல்லின் மறுவிளக்கம்தான் 'மல்லர்' என்பதும். 'மல்லல் வளனே' என்கிறார் தொல்காப்பியர். அது நிலவளம் என்றவகையில் வளவரான உழவரையும், உடல் வளம் என்றவகையில் வலியரான வீரரையும் குறிப்பது. இதற்கான நிகண்டு விளக்கத்தை கீழே இணைத்துள்ளேன். பாவாணர் அவர்கள் தமது சொற்பிறப்பு அகராதியில் 'மல்லர

மள்ளர் மருதநில மரபு - 2

Image
Part 1 continue.. அதனால் வெம்பிப் போயிருந்த இவர்கள் அடுத்த என்ன கதை சொல்லலாம் என்று பார்த்தார்கள். அதற்கு இவர்களுக்குக் கிடைத்த ஒன்றுதான் 'உழவர் என்றால் மள்ளர் என்று குறிப்பிட்ட பாவாணர் அவர்கள் அடைப்பிற்குள் 'வீரர் என்ற மள்ளர் என்பது வேறு' என்று கொடுத்த குறிப்பு. ஆம் அப்படித்தான் குறித்துள்ளார். இதை இல்லையென்று யார் சொன்னது? அப்படியெனில், வீரர் என்று அர்த்தம் தரக்கூடிய மள்ளர் என்பவர் பள்ளர் இல்லாமல் வேறு ஒருவர் என்று விளக்கம் எதுவும் கொடுத்துள்ளாரா? இல்லவே இல்லை. அவர் அப்படிச் சொன்னதன் விளக்கம்: ஏரெடுத்து நிலத்தை உழும்போது பெருந்திறல் உழவர்(மள்ளர்=உழவர்). வாளெடுத்து போரிடும் போது அருந்திறல் வீரர்(மள்ளர்=போர்மறவர், அரசர்). இதைத்தான் அவர் குறிப்பிடுவது. அதாவது, மள்ளர் என்பது 'ஒரு சொல் இரு வினையைக் குறிக்கும் மரபுப் பெயர்'(இணைப்பைக் கவனிக்க).  இதற்கு, மேலே நான் காட்டிய நிகண்டுகளின் விளக்கமும் தெளிவாக உள்ளது. பாவாணர் உழவர் என்போர் மள்ளர் என்பதற்கும் ஆதாரம் கொடுத்துள்ளார்(இணைப்பை பார்க்க). ஆனால், வீரர் என்றவகையில் அதே உழவர் 'மள்ளர்' என்பதற்கு ஆதாரம் கொடு

மள்ளர் மருதநில மரபு பெயர் - 1

Image
//மள்ளர் என்பது "ஒரு சொல் இரு வினையைக் குறிக்கும் மரபுப் பெயர்" // நாம் நம்முடைய வேலையைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கலாம் என்று நினைத்தால், பள்ளர்களின் உயர்ந்த வரலாற்றுப் பெருமை கண்டு ஆற்றாமையால் மனம் பேதலித்துப் போன, 'ஆட்டிற்கு இருக்கும் அளவே மூளை இருக்கும்' ஒரு புரட்டுக்கார பேர்வழி, நம்முடைய வரலாற்றைப் பேசுவதாக சொல்லி அடிக்கடி காமெடியாக பதிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். அந்த மாதிரியான பதிவுகளில் ஒன்றுதான் "தமிழ் இலக்கியத்தில் மள்ளர் மற்றும் மல்லர் என்பது பள்ளரைக் குறிக்காது" என்று சொல்லிப் பதிவிட்ட பதிவு. அதாவது, மள்ளர் என்பது பள்ளரைத் தவிர்த்து மற்றவர்களும் பயன்படுத்தக் கூடிய ஒரு பொதுச்சொல் என்று குறிப்பதுதான் இவரது பதிவின் நோக்கம். இது உண்மையா? இதைப் பார்ப்பதற்கு முன்பு 'மறவர்' என்ற சொல்லின் விளக்கம் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மறம் என்பது அறத்திற்கு எதிரான பண்பை அதாவது பாவம் மற்றும் கொடுஞ்செயலைக் குறிக்கும் சொல். இதைப்பற்றிய நிகண்டுவின் விளக்கத்தை கீழே இணைத்துள்ளேன். எனவே, மறத்தின் வழி வந்த மறவர் என்பது ஒரு பண்புப்பெயர். அதா

மள்ளர் (Mallar) மூவேந்தர் மரபு

Image
ஏர் பிடித்தவன் எல்லாம் உழவனாகி விட முடியாது...!!! போர் மறவன் எல்லாம் மள்ளனாகி விட முடியாது...!!! இந்த இரண்டையும் ஒருங்கே செய்தவன் பள்ளன் என்னும் மள்ளனை தவிர வேறு எவனாகவும் இருக்க முடியாது...!!! மள்ளர் மூவேந்தர்

வேளாளர் வணிகர் அரசர் அந்தணர்/

//வேளாளர் வணிகர் அரசர் அந்தணர்// எல்லா உயிர்வாழ்க்கைக்கும்இன்றியமையாத உணவை விளைப்பதனாலும், நிலையாகக்குடியிருந்து விளைவில் ஆறிலொரு பங்கைக் கடமையாகவிறுத்து அரசை நிலைநிறுத்துவதனாலும்,போர்க்காலத்திற் படைஞனாகிப் பொருதுவெற்றியுண்டாக்கு வதனாலும், இரப்போர்க் கீந்துதுறப்போர்க்குத் துணையா யிருப்பதனாலும், எல்லாத்தொழிலாளருள்ளும், உழவனே உயர்ந்த குடிவாணனாகவும்தலைசிறந்த இல்வாழ்வானாகவும் கொள்ளப்பட்டான். கைத்தொழிலாளரெல்லாம் உழவனுக்குப்பக்கத் துணை வராகவே கருதப்பட்டனர். "உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து."  (குறள்.1032) "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்."  (குறள்.1033) "பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்."  (குறள்.1034) "இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்."  (குறள்.1035) "இல்வாழ்வான் என்பான் இயல்புடையமூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை."  (குறள்.41) "துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை

// குமரிக்கண்டம் (Lemuria) //

Image
"மறைந்த குமரிக்கண்டம் (Lost Lemuria) என்னும் ஆங்கில நூலுட் போந்த படத்தினாலே, ஒரு பெருமலையானது மேலைக் கடலில் தொடங்கி வடக்குந் தெற்குமாகக் குமரிக்குத் தென்பகுதியிலுள்ள நிலப்பகுதியிலே நெடுந்தொலைவு சென்று பின் தென்மேற்காகத் திரும்பி 'மடகாசுக்கர்' என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகின்றது. அம் மலைக்குக் கீழ்ப்பக்கம் உள்ள நாட்டில் பெருமலை ஒன்றுமிருந்ததாகத் தெரியவில்லை. இந்த மலையானது தென்கிழக்கு முதல் வடமேற்குவரை செல்லுகின்ற இமயமலையைப் போல வடமேற்குத் தொடங்கித் தென்கிழக்கிற் செல்லுகின்ற ஒரு பெரு மலைத்தொடராக இருந்திருப்பதாகத் தெரிகின்றது"  2  (  சிலப் : 8:1) என்று பேரா.கா. சுப்பிரமணியப்பிள்ளை வரைந்திருப்பதனின்று, தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டம் என்னும் நிலப்பகுதி ஏறத்தாழ 2500 கல் தென்வடலாக நீண்டிருந்ததென்றும், அதன் மேற்குப்பகுதி நெடுகலும் ஒரு பெருமலைத்தொடர் தொடர்ந்திருந்ததென்றும் அறியப்படும். "முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி" (புறம். 9) என்று நெட்டிமையாரும், "பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும்"  (சிலப

ஐந்திணைப்பெயர் மூலம் - மருதம்

மருதம் :: மல் = வளம். "மற்றுன்றுமாமலரிட்டு" (திருக்கோ.178) மல் - மல்லல் = 1. வளம் ."மல்லல்வளனே." (தொல்.788). 2. அழகு. "மல்லற்றன்னிறமொன்றில்" (திருக்கோ.58, பேரா.) 3.பொலிவு(சூடா.). மல் - மல்லை = வளம். "மல்லைப்பழனத்து" (பதினொ. ஆளுடை. திருவுலா.8). மல் - (மர்)-மருது=ஆற்றங்கரையும்பொய்கைக்கரையும் போன்ற நீர்வளம் மிக்கநிலத்தில் வளரும் மரம். ஒ.நோ: வெல் - வில்-(விர்) - விருது =வெற்றிச் சின்னம். "பருதி.....விருது மேற்கொண்டுலாம்வேனில்"  (கம்பரா. தாடகை.5) மருது - மருதம் = பெரிய மருது, மருது, மருதமரம் வளரும் நீர்வள நிலம், வயலும் வயல் சார்ந்தஇடமும், நீர்வளமும் நிலவளமும் மிக்க அகநாடு. "அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத் துறையணி மருது தொகல்கொள வோங்கி"  (அகம். 97) "வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் பெருநல் யாணரின்"  (புறம்.52) "பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை தேங்கொண் மருதின் பூஞ்சினை முனையின் காமரு காஞ்சி துஞ்சும் ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே."  (புறம்.351) "மருதுயர்ந்