மள்ளர் மருதநில மரபு - 3
Part 2 continue.. குடும்பத் தலைவன் 'குடும்பன்'. அதன் படிநிலை வளர்ச்சியாக பல குடும்பங்கள் அடங்கிய 'குடும்பு' என்ற அமைப்பிற்குத் தலைவனானவன் ஊர்க் கிழவன் என்ற ஊர்க்குடும்பன். இந்த ஊர்க் கிழவன்தான் அரசகுலத் தொடக்கம் என்று ஏற்கனவே பாவாணரின் விளக்கம் காட்டியுள்ளேன். இதை எப்படி நம்புவது! இதையும் பாவாணர் தெளிவாக விளக்கியுள்ளார். ஆதாரம் கீழே இணைத்துள்ளேன். பார்த்துக் கொள்ளவும். ஏன் குடும்பம் என்பதும், ஊர் என்பதும் பள்ளர்கள் சம்பந்தப்பட்டது மட்டுந்தானா? மற்றவர்களுக்கு இல்லையா? திணைமயக்கம் ஏற்படுவதற்கு முன்பு வரை குடும்பம் என்ற அமைப்பும், அதனை சேர்ந்த ஊர்ப் பிரிவும் மருதநில மக்களிடத்தில் மட்டுந்தான் இருந்தது. இதற்கான பாவாணர் கொடுத்த தெளிவான ஆதாரத்தையும் கீழே இணைத்துள்ளேன். இந்த மள்ளர் என்ற சொல்லின் மறுவிளக்கம்தான் 'மல்லர்' என்பதும். 'மல்லல் வளனே' என்கிறார் தொல்காப்பியர். அது நிலவளம் என்றவகையில் வளவரான உழவரையும், உடல் வளம் என்றவகையில் வலியரான வீரரையும் குறிப்பது. இதற்கான நிகண்டு விளக்கத்தை கீழே இணைத்துள்ளேன். பாவாணர் அவர்கள் தமது சொற்பிறப்பு அகராதியில் 'மல்லர